நடுரோட்டில் டயர் வெடித்து அந்தரத்தில் பறந்த நபர்.! - வைரல் வீடியோ.!
tyre blast viral video
மனிதனின் கற்பனைக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. மீனைப் பார்த்து படகு, கப்பல் செய்தான். பறவையை பார்த்து விமானத்தை கண்டுபிடித்தான். அப்படி ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
ஆனால், அந்தத் தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதிப்புகளும் அளவில்லாமல் நடந்து வருகின்றது, என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், மனித வாழ்க்கையை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பம் வளரும் பொழுது அது ஆபத்தை தான் ஏற்படும் என்று ஐன்ஸ்டீன் அன்றே கூறினார்.
அதனை நிரூபிக்கும் வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி இருகின்றது. ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு நபர் நடுரோட்டில் வாகனத்தின் டயரை வைத்துக் கொண்டு, அதில் காற்றை நிரப்பி வருகின்றார்.
அப்பொழுது டயரானது திடீரென வெடித்ததில், அருகில் நின்ற நபர் வேகமாக தூக்கி வீசப்படுகின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இது போன்று கவனக்குறைவாக யாரும் வேலையில் ஈடுபட கூடாது என்று அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.