600 கணக்குகள்... 3500 சட்டவிரோத பதிவுகள் நீக்கம்...! - Grok சர்ச்சை - Seithipunal
Seithipunal


எலான் மஸ்க் சொந்தமான சமூக ஊடக தளம் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) மற்றும் அதன் Grok ஏஐ சாட்போட் தொடர்பாக, சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நோட்டீஸ் அனுப்பியது.

அதன் படி, 72 மணி நேரத்திற்குள் அனைத்து ஆபாச உள்ளடக்கங்களையும் நீக்க வேண்டும், சரியான விளக்கத்துடன் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாக உறுதி அளித்துள்ளது.

அரசின் உத்தரவிற்கு இணங்க, 600 கணக்குகள் மற்றும் 3,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத உள்ளடக்கங்கள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்திய அரசு சமூக ஊடகங்களில் அபாயகரமான ஏஐ பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்னிச்சையான நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

600 accounts 3500 illegal posts removed Grok controversy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->