#சேலம் : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு ஆயுள் தண்டனை - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (28). இவர் மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நவீன் குமார் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நவீன் குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நவீன் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth who sexually harassed a 12 year old girl was sentenced to life imprisonment in salem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->