சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. காவல்துறையினர் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு, தற்போது கேமராமேனாக பணியாற்றுகிறார். 

ரஞ்சித் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் பிபி சாலையில் உள்ளன நண்பரின் மருந்தகத்திற்கு இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து பிரபல தனியார் ரெஸ்டாரண்டில் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அனைவரும் அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், ரஞ்சித் வீட்டிற்கு சென்று இரவு 10 மணியளவில் இடதுபக்கம் முழுதும் வலிக்கிறது என தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வாந்தி எடுத்த நிலையில், உடனே அவரது அண்ணன் ரஞ்சித்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியில் திடீரென  ரஞ்சித் மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குடும்பத்தினர், சம்பவம் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth who ate chicken at restaurant died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->