வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வாலிபர் தற்கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
youth sucide in near dindivanam for love failure
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே ஆசூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. விவசாயியான இவருடைய மகன் கார்த்திக் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வந்தார். இதற்கிடையே அவர் அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அப்போது, கார்த்திக் அந்த மாணவியிடம் தனது காதலை பலமுறை கூறியும், அந்த மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கார்த்திக், கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி, வெங்கந்தூர் கிராமத்தில் ரமேஷ் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், கார்த்திக் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்ததும், அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால், `வாட்ஸ்-அப்'பில் வெயிட்டிங் பார் மை டெத் என்று ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth sucide in near dindivanam for love failure