திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை - கன்னியாகுமரியில் பரிதாபம்.!
youth sucide for not marriage in kanniyakumari
திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை - கன்னியாகுமரியில் பரிதாபம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கென்சிலின் பிரபு. கட்டுமானத் தொழிலாளியாக உள்ள இவருக்கு முப்பத்தொன்பது வயது ஆகியும், திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதுகுறித்து தன் நெருங்கிய நண்பர்களிடமும் புலம்பி வந்துள்ளார். இதனால், கென்சிலின் பிரபு கடந்த சில நாட்களாகவே யாருடனும் பேசாமல் மன வேதனையிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் நேற்று மாலை கண்டன்விளை பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம்குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி விரைந்து வந்த ரயில்வே போலீஸார் கென்சிலின் பிரபுவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.திருமணம் ஆகாத விரக்தியில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth sucide for not marriage in kanniyakumari