தாய்மாமனை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


தாய் மாமனை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் என்பவர் பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான மரியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தங்கச்சி மகனான ஜெயக்குமார் என்பவர் மரியதாசிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் மரியதாஸ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் மரியதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth stoned his mother to death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->