மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!
Youth murdered Near Salem
மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனது குழந்தையுடன் சென்றுள்ளார்.
திரும்பி வரும் போது அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் அஜய் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்தவர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth murdered Near Salem