தலைக்கேறிய மது போதை.. தைப்பூச திருவிழாவில் நண்பனை கொன்ற இளைஞர்..! - Seithipunal
Seithipunal


தைப்பூச திருவிழாவில் நடைபெற்ற தகராற்றில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் சங்ககிரி லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தைப்பூச திருவிழாவை ஓட்டி நடந்த சுத்து பொங்கல் நிகழ்ச்சியில் நடந்த விளையாட்டு போட்டியை தன்னுடன் பணிபுரியும் கோபி என்பவருடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கோபி உமாசங்கரை கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Murder Near Namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->