#தஞ்சாவூர் || மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதன் (24). இவர் அய்யாம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மதன் வேலை முடிந்து நள்ளிரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மழை காரணமாக இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கட்டடத்தின் அருகே நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் கோபுரம் மின்விளக்கு சுவிச் பாக்சில் கை வைத்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி தூக்க வீசப்பட்ட மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர், மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth dies due to electrocution in Thanjavur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->