செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் இலங்கை தமிழ் இளைஞர் செய்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மறுவாழ்வு மையத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையியை சேர்ந்த ராணி என்பவர் பிள்ளைகளுடன் கடந்த 2008ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகிறார்.  இவருன் மகன் நிரோஷன் (22) என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். 

இவர் அங்குள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராணி அவரை கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் இருந்து எலி மருந்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடித்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த  காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Committed Suicide In Manadabam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->