காஞ்சிபுரம்: மனைவியுடன் தகராறு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கச்சிப்பேட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சண்முகம் அந்த பகுதியில் கோழிக்கறி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சண்முகத்திற்கு அவரது மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்முகம் மன உளைச்சலில் விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதி சண்முகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commits suicide due to dispute with wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->