ஆன்லைன் கேமால் காதல்.. சிறுமியை கடத்தி சென்ற ப்ரீ பயர் காதலன்.. போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மதுரை பசுமலை பகுதியில் 11ம் வகுப்பு சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆன்லைன் கேமான ப்ரீபயர் விளையாடுவதில் அலாதி விருப்பம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலலையில், அவருடன் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த  தமிழக இளைஞரான செல்வா என்பவரும் விளையாடி வந்துள்ளார்.  இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த டிசம்பர் மாதம் அவரை மகராஷ்டிராவிற்கு செல்வா கடத்தி சென்றுள்ளார். அங்கே தனியே வீடு எடுத்து அவருடன் இருந்து வந்துள்ளார். மகளை காணாமல் அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவியை தேடி வந்தனர்.  அதன்பின், மாணவி இருக்கும் இடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள  செல்வாவை தேடி வந்தனர். 


அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அந்த சிறுமியை ஏமாற்றி  அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் கேமால் பல சிறுமிகளின் வாழ்க்கை தடம் மாறி போவதால் பெற்றோர்கள் குழந்தைகள் செல்போனில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது அவசியமாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested Who kidnap a girl


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->