சிறுமியுடன் திருமணம்.. குறைமாதத்தில் பிறந்த குழந்தை.. வாலிபர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், சருத்து பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெரியதுரை (28). இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தம பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்தது.தாய் சேய் இருவருக்கும் கடுமையான உடல் நல கோளாறு ஏற்பட்டது.

 இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பெரியதுரை மற்றும் அவரது உறவினர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested POCSO Near Theni


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->