ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி அருகே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில், கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அதில், அவர் மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பதும், ரயில் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து பட்டரவாக்கம் மற்றும் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் கட்டிடத் தொழிலாளிகள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for drugs sales in railay station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->