இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை., வாலிபரை கைது செய்த காவல்துறையினர்...!!
Youth arrested due to haraassing girl near Thiruvallur
12 வகுப்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை , தண்டையார்பேட்டையில் 12 வகுப்பு மாணவி வசித்து வருகிறார். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதால் அவருக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தந்துள்ளனர்.
இதனை அடுத்து அவர் செல்போனில் அவர் இன்ஸ்டாகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து தனது புகைபடங்களை அதில் பதிவேற்றியுள்ளார். இந்நிலையில், அவரின் புகைபடங்களை கொண்டே போலி கணக்கு துவங்கி அந்த சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி கணக்கு தொடங்கிய கலைசெல்வன் என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் விசாரணையில் அவர் போலி கணக்கு மூலம் பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதை ஒப்புகொண்டார். சிறுமியின் புகாரை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
English Summary
Youth arrested due to haraassing girl near Thiruvallur