பேஸ்புக் மூலம் நட்பு ! பெண்குரலில் பேசி இளைஞன் அரங்கேற்றிய தில்லாலங்கடி நாடகம்.! ஆடிப்போன போலீசார்!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வருபவர் நவீன்குமார். இவர் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் . இந்நிலையில் இவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நவீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 அப்பொழுது அவர் வித்தியாசமாக பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடித்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.அதாவது நவீன் குமார் பேஸ்புக் மூலம் தானும் ஒரு பெண் போல பிற பெண்களிடம் நண்பராகி, அவர்களிடம் நெருங்கிய நட்பை உருவாக்கியுள்ளார்.

 பின்னர் அவர்களிடம் போனில் பெண் குரலில் பேசி  தாம் வைத்திருக்கும் நகைகளை ஒரு குறிப்பிட்ட கோவிலில் வைத்து வழிபட்டால் இருப்பதைவிட செல்வம் பெருமளவில் பெருகும் என்று அவர்களின் ஆசையை தூண்டி ஏமாற்றியுள்ளார்.

 பின்னர் அவர்களும் நவீன் சொன்னதைக் கேட்டு நகைகளை கோவிலில் வைத்து வேண்டி விட்டு , சுற்றி  வருவதற்குள் அவன் நகைகளை தூக்கிக்கொண்டு  தப்பித்துள்ளான் . மேலும் நவீன்குமாருக்கு உதவியாக அவரது நண்பர் ராஜ்குமாரும் இந்த நகை மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகளையும், மூன்று லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngman cheating and robbery jewlws by facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->