குடிபோதையில் தகராறு செய்த அண்ணன்... வெட்டிக்கொன்ற தம்பி... ஈரோட்டில் பயங்கரம்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருக்கு சதீஷ்குமார் (34), நகுலன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து கிராமத்தில் உள்ள பலரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த சதீஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தம்பி நகுலன் அண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார் அரிவாளை எடுத்து தகராறு செய்த இரண்டு பேரையும் கொலை செய்து போவதாக கிளம்பியுள்ளார்.

அப்பொழுது தாய் மகாலட்சுமி சதீஷ்குமாரை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் சதீஷ்குமார் ஆத்திரத்தில் தாயை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதை பார்த்த நகுலன் சதீஷ்குமாரை தடுத்துள்ளார். இதனால் இவர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சதீஷ்குமார் கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய நகுலன், ஆத்திரத்தில் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார்.

இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சதீஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அண்ணனை கொன்ற தம்பி நகுலனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Younger Brother arrested for stabbing elder brother to murder in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->