வேலைக்கு போ என சொன்னதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வேலைக்கு செல்ல கூறியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் இஸ்ரேல். இவரது மனைவி சுனிதா.  இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு  மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனது தாயுடன்  சென்னையில் வசித்து வருகிறார். டிப்ளோமோ படித்து வரும் சௌந்தர்யாவை அவரது குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர்.

இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவர் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman Committed suicide in Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->