பிரியாணி பார்சல் தராததால் கடை ஊழியரை கத்தியால் குத்திய நபர்.!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் பணிமனை கார்டன் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதையன் என்ற வாலிபர் வேலை செய்து வந்தார். அந்த பிரியாணி கடைக்கு மேட்டூரை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவர் சென்றார். 

பின்னர் அங்கிருந்த மாதையனிடம் ஒரு பிரியாணி பார்சல் தருமாறும், பின்னர் பணம் தருவதாக கூறினார். இதற்காக மாதையன் ஏற்கனவே நீங்கள் பழைய பாக்கி தர வேண்டி இருப்பதால், கடை முதலாளியிடம் சொன்னால் தான் தருவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான் பாஸ்கோ வெங்காயம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மாதையனை குத்தினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்தவர்கள், காயமடைந்த மாதையனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மேட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாதையனை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜான் பாஸ்கோவை தேடிவருகின்றனர். ஜான் பாஸ்கோ மீது ஏற்கனவே கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man was stabbed


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->