காதலி வீட்டில் வாலிபருக்கு நடந்த விபரீதம் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


காதலி வீட்டில் வாலிபருக்கு நடந்த விபரீதம் - தீவிர விசாரணையில் போலீசார்.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே மாயார் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரதீப். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர் சொந்த ஊரான மசினகுடியில் உள்ள காவ்யா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், காவ்யாவுக்கு வருகிற 8-ம் தேதி பிறந்த நாள் என்பதால், அதனை கொண்டாடுவதற்காக பிரதீப் கடந்த 26-ம் தேதி காவ்யாவின் வீட்டுக்கு வந்து தங்கினார். இதையடுத்து காவ்யா நேற்று காலை தனது தாயாரிடம் பேசுவதற்காக வீட்டின் மாடிக்குச் சென்றுவிட்டு, சிறிது நேரத்துக்கு பின்னர் வந்துள்ளார்.

அப்போது பிரதீப் சமையலறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவ்யா கூச்சலிட்டு கதறி அழுதுள்ளார். இந்தக் கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரதீப்பை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. 

இதனால் மனமுடைந்த காவ்யா தற்கொலைக்கு முயநின்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide in girl friend house in neelagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->