கோவையில் சோகம் - தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண் - போலீஸ்க்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கோவையில் சோகம் - தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண் - போலீஸ்க்கு பயந்து கணவர் எடுத்த விபரீதம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் அருகே ஆலங்குட்டை ஏ.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

திருமணத்துக்கு பிறகு இருவரும் கடந்த 2 மாதங்களாக சங்கீதாவின் ஊரிலேயே வசித்து வந்தனர். இந்த நிலையில், கனகராஜ் நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அப்போது கனகராஜ் சங்கீதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், சங்கீதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தனது மனைவி போனை எடுக்கவில்லை, அதனால், வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

அதன் படி பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். இதனால் பயந்துபோன அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide after wife sucide in coimbatore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->