திண்டுக்கல்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Young man committed suicide in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சங்கால்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விவசாயி மதன்குமார்(30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மதன்குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் மனவேதனையில் இருந்த மதன்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மதன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதன் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man committed suicide in Dindigul