கத்தி குத்தில் முடிந்த வாக்குவாதம்... இளம்பெண் பலி காதலன் கவலைகிடம்..! - Seithipunal
Seithipunal


காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில் இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று உள்ளது. இந்த நூற்பாலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நூற்பாலைலையில், சதீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த துளசி என்பவரும் ரூபேஷ் குமார் என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

வழக்கம் போல நேற்று முன் தினம் வேலை முடிந்து துளசி பணியாளர் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அப்போது ரூபேஷ் குமார் அங்கு வந்துள்ளார். சிறிது நேரத்திற்கெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் சரமாறியாக குத்திகொண்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் பலத்தகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் துளசி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ரூபேஷ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Girl Murder Near Namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->