காதலியை கழுத்தை அறுத்த பின் காதலன் அதே இடத்தில செய்த கொடூரம்.!
young boy murder his lover and suicide
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் தனது காதலியை கழுத்தறுத்துக் கொன்ற காதலன், தானும் கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள காரகோணம் பகுதியைச் சேர்ந்த ஆஷிகா என்ற 19 வயதுடைய இளம் பெண் இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். ஆஷிகாவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனு என்ற இளைஞனும் பள்ளிக் காலம் முதலே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு ஆஷிகாவை திருமணம் செய்துவைக்குமாறு அவரது தந்தை அஜித்குமாரிடம் அனு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான். அதற்கு அவரது தந்தை சம்மதிக்காததால், மனமுடைந்த சோடா பாட்டிலுடன் ஆஷிகாவின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஆஷிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் கொடூரமாக கழுத்தறுத்து கொண்டு அதே இடத்தில தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
English Summary
young boy murder his lover and suicide