நாமக்கல்: தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வேப்பநந்தம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி பொன்னுசாமி (வயது 59). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் பொன்னுசாமி நேற்று பி.மேட்டூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆண்டகளூர் கேட் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமியை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பொன்னுசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed private bus collision in namakkal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->