சிவகாசி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழையவெள்ளையாபுரம் பகுதியில் உள்ள அட்டைப்பெட்டியை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் முனுசாமி (32). இவர் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 21 வயதான இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அந்த இளம்பெண் இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிர்வாகத்தினர் முனுசாமியை கண்டித்துள்ளனர். ஆனால் முனுசாமி மீண்டும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் இளம்பெண் இந்த சம்பவம் குறித்து திருத்தங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் முனுசாமியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker arrested for sexually harassing a young girl in Sivakasi near virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->