கலெக்டர் முன்பே கழுத்தை அறுத்த பெண்மணி.!! அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் திருவந்திபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இன்று காலை இவர் கலெக்டரிடம் குறை தீர்ப்பு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர், அதிகாரி முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்தார்.

கழுத்திலிருந்து  இரத்தம் வந்துள்ளது. இதை பார்த்த கலெக்டர் மிகவும் அதிர்ச்சி அடைந்தர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தினர். என்ன காரணம் என வினவிய பொழுது, "எனது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். என்னுடைய உறவினர்கள் ஏமாற்றி எங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்.

வீடு உட்பட எதுவும் எங்களுக்கு இல்லை. நாங்கள் நடுத்தெருவில் நிற்க கூடிய சூழ்நிலையில் இருக்கின்றோம். பலமுறை மனு கொடுத்துள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கஷ்டப்படுவதை விடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

அதனால்தான் கழுத்தை அறுத்துக் கொண்டேன்." என அவர் கண்ணீர் மல்க அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். பின்னர், போலீசார் அமுதாவிற்கு அறிவுரை வழங்கி கலெக்டர் அறிவுரை வழங்கினார். இது சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி அளித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women try to suicide in collector office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->