பட்டப்பகலில்.. இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொடூர கொலை.! திடுக்கிடும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


இளம் பெண் ஒருவரை ரயிலில் தள்ளிவிட்டு இளைஞர் படுகொலை செய்துள்ள சம்பவம் பரங்கி மலையில் அரங்கேறியுள்ளது. 

காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. 

அத்துடன், கொலை செய்வது மட்டுமல்லாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தும், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு கொடுமை தான் தற்போது அரங்கேறி உள்ளது. 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை செய்த இளைஞர் பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளார். 

இதில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அத்துடன் அந்த பெண்ணை கொலை செய்த இளைஞரும் யார் என்பது தெரியவில்லை. அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், கொலை நடந்த இடத்தில் தற்போது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women murdered in parangimalai railway station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->