வயலுக்கு சென்ற போது பரிதாபம்.! மின்னல்தாக்கி பட்டதாரி பெண் பலி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் வயலுக்கு சென்ற போது மின்னல்தாக்கி பட்டதாரி பெண் உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பிரதகம்பாள்புரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகள் பிரியங்கா(26). பட்டதாரியான பிரியங்கா தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது மழை பெய்ததால் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் பிரியங்கா சத்தம் போட்டு உள்ளார்.

இதையடுத்து பிரியங்காவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பிரியங்கா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women killed in lightning in Pudukkottai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->