காதல் பிரச்சனையால் மூதாட்டி அடித்து கொலை..! திருப்பூரில் பெரும் சோகம்.!!
Woman Was Murdered in Tiruppur Due to love issue
காதல் தகராறால் மூதாட்டி அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வேலம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மயங்காத்தாள் மற்றும் சகுந்தலா என்ற இரு மனைவிகள் உள்ளனர். இதில் மயங்காத்தாளுக்கு குழந்தைகள் இல்லை. சகுந்தலாவிற்கு கார்த்திக், சரவணகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சரவணகுமாருக்கு திருமணம் ஆகிவிட்டது.
இதற்கிடையில் சகுந்தலா இறந்துவிட்டதால் மயங்காத்தாள் இவர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணன் அவரின் அண்ணியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
காதல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கார்த்திக்கின் மனைவி பிரியங்கா, அவரது தந்தை , சகோதரர், அவரின் உறவினர் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில், பேச்சுவார்த்தையின் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதால், மாயங்காத்தாளை நால்வரும் அருகில் இருந்த சுவரில் தள்ளியுள்ளனர்.
இதனால், மாயங்காத்தாள் மயக்கமடைந்தார், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே மாயங்காத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கார்த்திக் மற்றும் பிரியங்கா, பிரியங்காவின் தந்தை, சகோதரர், உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Woman Was Murdered in Tiruppur Due to love issue