காஞ்சிபுரம் || வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய இளம்பெண் - லாரி மோதி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச் செல்வி. முதுநிலை பட்டதாரியான இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், வெற்றிச் செல்வி நேற்று வழக்கம் போல் பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கனரக லாரி ஒன்று வெற்றிச்செல்வி மீது மோதியது.

இதில் வெற்றிச்செல்வி, நிலைதடுமாறி சாலையில் விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் பத்து மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரது தலையின் ஒருபகுதி முழுவதும் சிதைந்து சம்பவ இடத்திலேயே வெற்றிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் ஓடி வந்து லாரி ஓட்டுநரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, பிறகு சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்ததும் அவர்களிடம் ஓட்டுனரை ஒப்படைத்தனர். 

இதையடுத்து போலீசார் உயிரிழந்த வெற்றிச்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died lorry accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->