பைக் ரேஸால் அநிநாயமாக பலியான பெண்.. சென்னையில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பைக் ரேஸில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் மோதி  பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர் மீஞ்சூர் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது தோழியுடன் பேசிக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் பயமுறுத்தும் வகையிபல் பைக் ரேசில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் அதே வேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அந்தப் பெண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் சாலையோர தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும்,  அந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

 தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரை மீட்டு காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஸில் ஈடுபட்ட விபத்தை ஏற்படுத்திய முடுச்சூரை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .

மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட மற்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிர் இழந்தது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death in Accident at Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->