திருமணமான ஏழே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெருவை சேர்ந்தவர்  ரவிகுமார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.  அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ரவிக்குமார் அழைத்து சென்றார்.

ஆனால், அவரை ரவிக்குமார் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide in Cuddalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->