வரதட்சணை கேட்டு தினம் துன்புறுத்தல், கர்ப்பிணி பெண் தற்கொலை..!! சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்..!!
Woman Committed suicide due to dowry
கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மானியதஅள்ளி பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கவாசகன். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதனை அடுத்து வனிதா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணிக்கவாசகன் வரதட்சனை கேட்டு வனிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று, வனிதாவை காண வந்த அவரது தாயையும் அவர் அடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வனிதா வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வனிதாவின் உடலை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வழியில் நின்றுள்ளது. வனிதாவின் உறவினர்கள் அங்கு சென்று பார்க்கும் போது ஆம்புலன்ஸ் டிரைவர் மது அருந்தி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமைடைந்த அவர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரகளை சமாதானபடுத்தி ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். ஆனால் வனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. அவர்களை அங்கிருந்து அப்புறபடுத்த காவல்துறையினர் முயற்சி செய்த போது இரு தரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு வந்த வருவாய் கோட்டாச்சியர் சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Committed suicide due to dowry