திண்டுக்கல் : மதுபோதையில் தகராறு செய்த கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : மதுபோதையில் தகராறு செய்த கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் மகன் வீரையன். இவருடைய மனைவி அபிராமி. இவர்களில், வீரையன் கட்டிடத் தொழிலாளியாகவும், அபிராமி விவசாயக் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். 

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், வீரையன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மனைவியுடன் சண்டையிட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து வீரையன் நேற்றும் வழக்கம் போல் அபிராமியுடன் சண்டையிட்டு தகராறு செய்து வந்துள்ளார். 

கணவரின் துன்புறுத்தலை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த அபிராமி, வீரையனின் பிறப்புறுப்பில் இரும்பு குழாயால் குத்தியுள்ளார்.  இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த வீரையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வீரையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் அபிராமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill husband in dindukal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->