பரமக்குடி | கணவர் இறந்த அன்றே மனைவி தற்கொலை : ஒரே நாளில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


பரமக்குடியில் மாடியிலிருந்து விழுந்து கணவர் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு துயர சம்பவங்களால் நடந்ததால், உறவினர்கள் சோகமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர்  சுதாகர் (36), எலக்ட்ரீஷியனான இவரது மனைவி தாரணி காமாட்சி (26), மகன் ஹர்ஷித் (3). நேற்று முன்தினம் மாலை, பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மாடி வீட்டின் ஜன்னலில் கொசுவலை அடிக்கும் பணியில் சுதாகர் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியிலிருந்து சுதாகர் தவறி கீழே விழுந்துவிட்டார்.

இதில், தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுதாகர் உயிரிழந்தார். இதனையறிந்த தாரணி காமாட்சி மிகுந்த மனவேதனையடைந்தார். சுதாகரின் உடல் மதுரை மருத்துவமனையிலிருந்து பரமக்குடிக்கு கொண்டு வருவதற்குள், நேற்று மாலை தனது மகனை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

ஒரே நாளில் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பரமக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide in grief over husband's death: Another shocking incident in one day!


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->