மீனவ மக்களுக்கான  இட ஒதுக்கீடு என்னாச்சு..கேள்வி எழுப்பிய அனிபால் கென்னடி MLA!  - Seithipunal
Seithipunal


மீனவ மக்களுக்கான  இட ஒதுக்கீடு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து பல முறை மாண்புமிகு முதல்வரிடம்  கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்று சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி அவர்கள்  அரசிடம் கேள்வி எழுப்பினார் .

புதுச்சேரி மாநிலத்தில் வாழ்கின்றமிக மிக பின்தங்கிய மக்களான மீனவ மக்களுக்கு அளித்த வாக்குறுதியான ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி அளிக்கப்படும் என்ற உறுதி மொழியினை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது  வேதனை தரக்கூடியதாக இருக்கிறது என்று புதுவை மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ கண்டனம்.

2025 26 நிதிநிலை அறிக்கை மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கையின் மீதும் நான் சட்டமன்றத்தில் பேசும் போது பழங்குடியின மக்களுக்கு நிகரான. EBC எனப்படும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற மீனவ மக்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் வாழ்கின்ற அட்டவணை இன மக்களுக்கு அளிப்பது போல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்பொழுது மாநில முதல்வர் அவர்கள் எனது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
 குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த மீனவர் தினத்திலும் நடப்பாண்டில் சமீபத்தில் ஒன்றிய  அமைச்சர் கலந்து கொண்ட மீனவர் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிலும் மிக மிக பின்தங்கிய மக்களான மீனவ மக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை புதுச்சேரி மாநிலத்தில் இருக்கின்ற அட்டவணை இன மக்களுக்கு வழங்குவது போல் இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் இதுவரை அதனை அமல்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மீனவர் தினத்திலும் அரசு விழாக்களிலும் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதும் அதனை அமல்படுத்தாமல் காலதாமதப்படுத்துவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். நடப்பு கல்வி ஆண்டு தொடங்குகின்ற வேளையில் அம்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற அரசு ஆணை வெளியிட வேண்டும். சமூகப் பொருளாதாரத்தில் பழங்குடியின மக்களை போல வாழுகின்ற அவர்களுக்கு இச்சலுகையினை வழங்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்பி ஏராளமான மீனவ மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல இரண்டு சதவீதம் உள்ள EWS எனப்படும் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததினால் ஆறரை சதவீதம் உள்ள மீனவ மக்களுக்கு வெறும் இரண்டு சதவீதம் உள்ஒதுக்கீடா? என கடும் கொந்தளிப்பில் அம்மக்கள் உள்ளனர். அதனை சரி செய்யும் வகையில் எந்த தரவுகளும் இல்லாமல் முன்னேறிய வகுப்பினருக்கு கொடுத்ததை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். சரியான கணக்கெடுப்பு நடத்தி மீனவ மக்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அனிபால் கென்னடி எம்எல்ஏ அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What has happened to the reservation for the fishing community? Asks MLA Anibal Kennedy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->