நீட் மறுத் தேர்வு வழக்கு விசாரணைக்கு வந்த போது என்னாச்சு...?
What happened when NEET re examination case came up for hearing
சென்னையில் ஆவடி மையத்தில் முழுவதுமாக 464 மாணவர்களுக்கு NEET தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இது பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியிலிருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில், 'தங்களுக்கு மறு தேர்வு தேவை' என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அந்த மனுவில், மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என 'மத்திய அரசு' தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று வழங்கியது. அதில், நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த உத்தரவில்," 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும்" தெரிவித்து வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
English Summary
What happened when NEET re examination case came up for hearing