ஐயோ பாவம்! பாதயாத்திரைக்காக சென்றவர்களுக்கு நடந்த பயங்கரம்...! 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


கடலூர் விருத்தாச்சலத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நாரியப்பனுரிலுள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக இன்று 10க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை கடலூரின் மணலூர் பகுதியில் பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பாதயாத்திரை சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே அநியாயமாக பலியாகினர். மேலும்,இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள்வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What a tragedy happened to those who went on a pilgrimage 3 people died


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->