ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு ..! குளிக்க தடை தொடர்கிறது...!
Water flow declines in Okenakkal Bathing ban continues
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 28000 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று அது 20,000 -மாகவும், இன்று காலை 8 மணி நிலவரப்படி 18000 கன அடியாகவும் குறைந்தது.

மேலும், அதிக நீர்வரத்து இருந்தபோதும், சினிபால்ஸ், மெயின் அருவி,ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தது.
இதனிடையே,காவிரி ஆற்றில் குளிக்க தடை இன்று 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் சேவைக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Water flow declines in Okenakkal Bathing ban continues