#விருதுநகர் || அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து விபத்து.! - பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை படுகாயம் ..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போடப்பட்டிருந்த கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை படுகாயமடைந்து உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பரங்கி நாதபுரம் பகுதியிலுள்ள முனுசாமி என்பவரின் மனைவி முத்துலட்சுமி, கடந்த சனிக்கிழமை இரண்டாவது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் படுத்திருந்த கட்டில் நேற்றிரவு உடைந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை படுகாயம் அடைந்தது.

குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு முக்கிய காரணம் பழைய கட்டில் போடப்பட்டிருந்தது, என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar govt hospital five days old baby accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->