விருத்தாச்சலம் தனியார் மெட்ரிக் பள்ளி +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.! தற்கொலைக்கான காரணம் என்ன? முதல்கட்ட தகவல்.!
viruthachalam school girl sivakami suicide case
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி, இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சக்தி மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சிவகாமி, இன்று காலை பெற்றோர்கள் திட்டியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மாணவி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர்கள் திட்டியதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
இன்று காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, மாணவி தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
மேலும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையை உண்டாக்குவதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
viruthachalam school girl sivakami suicide case