உயிர்போகும் தருவாயில் மரண வாக்குமூலம்.. காமுகனின் கொடூரத்தால், துடிதுடித்து உயிரிழந்த சிறுமி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியை சார்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் பி.ஏ முதலாம் வருடம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டின் மாடியில் உள்ள குளியல் அறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். 

இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 100 விழுக்காடு தீக்காயத்துடன் படுகாயமடைந்து இருந்த சிறுமி, நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 

இது குறித்த வாக்குமூலத்தில், " கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எனது அலைபேசிக்கு தவறுதலான அழைப்பு வந்தது. இதில் பேசியவன், தன்னை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியை சார்ந்த விக்கி என்ற வெங்கடேஸ்வரன் (வயது 23) என்று தெரிவித்தான். 

மேலும், கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருவதாகவும் தெரிவித்த நிலையில், சில நாட்கள் நட்பாக பேசி வந்தோம். இதன்பின்னர், சிவகாசிக்கு வருகை தந்தபோது, என்னை சந்தித்த நிலையில், இருவரும் காதலித்து வந்தோம். 

இதனையடுத்து, மீண்டும் சிவகாசிக்கு வந்த கொடூரன் என்னை அங்குள்ள சித்தூராஜபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். இதனை விடியோவாக எனக்கு தெரியாமல் பதிவு செய்துகொண்டான். இந்நிலையில், இதனை அவனது நண்பர்களுக்கு அனுப்பப்போவதாக கூறி என்னிடம் மிரட்டினான். 

இதனால் பயந்துபோன நான் உயிரை விட முடிவு செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளேன். அவனை விட்டுவிட வேண்டாம் " என்று வாக்குமூலம் அளித்த நிலையில், சில நிடங்களுக்கு உள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விக்கியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sivakasi girl Suicide due to Lover Torture Sent Private video to his Friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->