#விழுப்புரம் || பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை.!
vilupuram rowdy abishek murder
விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை அடுத்த கோட்டக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவரது மகன் அபிஷேக் (வயது 23). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. இவர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு பின்புறம் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அபிஷேக் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று அபிஷேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, காவல் துறையினர் விசாரணையின் போது கிடைத்த தகவலில் படி, நேற்று மாலை அபிஷேக் வீட்டிற்கு 4 நபர்கள் வந்து அபிஷேக்கிடம் மது குடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்று, மது வாங்கிய பின்னர் தென்னந்தோப்புக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த 4 நபர்கள் சேர்ந்து அபிஷேக் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
English Summary
vilupuram rowdy abishek murder