கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி வழக்கில்.. அடுத்த அதிரடி.. கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கு ரம்யா என்ற 18 வயது மகள் இருக்கின்றார். இவர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில்,, நேற்று காலை கல்லூரி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த பேராசிரியர்கள் மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,, இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 

பின்னர் இந்த விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் எழுதியதாக ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு, "இரண்டு தனிப்படைகள் அமைத்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அந்த மாணவி எழுதி இருந்ததில் குடும்ப பிரச்சினையை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வாக்குமூலம் பெற நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.க" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram College girl suicide attempt issue Letter


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->