விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி வதந்தியா? வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்க்கு இருமல், மார்பு சளி காரணமாக நேற்று முன்தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் அவர் 3 வது நாளாக இன்று சிகிச்சை பெற்று வருவதாகவும் செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனதலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். 

அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்பவும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth health news 


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->