விஜயகாந்த் கூறிய அந்த ஒரு வார்த்தை.,திமுகவை வேரறுக்க களமிறங்கிய தேமுதிக தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் போது, கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என செய்தியாளர்களிடம் சைகை மூலம் கூறினார்.

இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் வருந்த செய்தது. ஆனால், அவர்களது தொண்டர்கள் மீண்டும் விஜயகாந்த் பூரண நலம் அடைந்து கம்பீரமான பாணியில் பேசவேண்டுமென ஆசை கொண்டனர்.அதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். 

அப்போது, வட சென்னையில் தேமுதிக வேட்பாளரான ஆர் மோகன்ராஜை ஆதரித்தும் மற்றும் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் அதிமுக வேட்பாளரான ஜெயவர்த்தனை தென் சென்னையில் ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பின்னர் அவர் மத்திய சென்னையில், "மருத்துவர் அய்யாவின் ஆசிபெற்ற மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றும், வடசென்னை தொகுதியில் பிரச்சாரம் செய்த பொழுது, "ஸ்டாலினுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்" என்றும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டணி கட்சி தொண்டர்களும் விஜயகாந்த் வருகையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. அப்போது தேமுதிக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth campaign in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->