வெற்றி பெற்ற மறுநாளே மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!
Vijay Makkal Iyakkam who fulfilled the demand of the people the day after the victory
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினரை பொதுமக்கள் பாரட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயட்ச்சையாக போட்டியிட்டனர்.
9 மாவட்டங்களில் கள்ளகுறிச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கணிசமான வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றனர். உள்ளாட்சி தேர்தலில் பிராதான கட்சிகளே தோல்வியை தழுவிய நிலையில் இவர்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று ஆச்சர்யபட வைத்துள்ளனர்.
இந்நிலையிக்ல் வேலூர் மாவட்டம் குடியாத்ததிற்குட்பட்ட தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் 6 வது வார்ட் உறுப்பினராக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த எழுமலை வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொறுத்தினர்.
அந்த பகுதி மக்கள் அங்கு திருட்டு சம்பவம் நடைபெறுவதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், வெற்றி பெற்ற மறுநாளேன் அந்த கோரிக்கையை நிறைவேற்றியதற்கு ஏழுமலையை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Vijay Makkal Iyakkam who fulfilled the demand of the people the day after the victory