பிகில் படத்துக்காக கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களுக்கு ரிவிட் அடித்த காவல் துறை.! ஜாமீனே இல்லையாம்! - Seithipunal
Seithipunal


பிகில் படத்தை திரையிட தாமதமானதால், பொதுச் சொத்துக்களை அடித்து உடைத்து கலவரத்தில் ஈடுபட்ட, விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விடியற்காலை திரையிடப்படும் பிகில் படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நேற்று  நள்ளிரவு முதலே கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் திரள தொடங்கினர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சி என கிருஷ்ணகிரி விஜய் ரசிகர் மன்றத்தால் அறிவித்து. அந்த சிறப்பு கட்சிக்காக 500 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விஜய்நி ரசிகர் மன்றம் அறிவித்தபடி அதிகாலை 3 மணி வரை பிகில் சிறப்பு காட்சி நடைபெறவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் சாலையில் இருந்த பேரிகார்டுகளை அடித்து உடைத்தும், அவற்றை சாலையின் நடுவே தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த சாலையோர வியாபாரிகளின் கடையையும்  சூறையாடினர் கடாயில் இருந்த பொருட்களையும் எ டுத்து சாலையில் தூக்கி வீசினர்.

விஜய்அ ரசிகர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது, இதையயடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை லேசான தடியடி நடத்தி ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர்.

இதையடுத்து, அதிகாலை நான்கு மணிக்கு பிகில் திரையிடப்பட்ட நிலையில், 3 மணி நேரம் படம் முடிந்து வெளியே வந்தவர்களில் ரகளையில் ஈடுபட்டவர்களை மட்டும் தனியாக காவல் நிலையத்துக்கு பிடித்துச்சென்றனர்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக விஜய் ரசிகர்கள் 30 பேர் மீது, ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay fans violence for bigil film


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->